இலங்கையின் கடற்படைக் கப்பலை திரிகோணமலை துறைமுகத்தில் விடுதலைப் புலிகள்
சனிக்கிழமை குண்டு வைத்து மூழ்கடித்தனர்.
அதிகாலை 2.15 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. விடுதலைப் புலிகளின் கடல் புலிகள், தண்ணீருக்கு அடியில் சென்று, எம்.வி. இன்விசிபிள் என்ற கப்பலுக்கு குண்டு வைத்து வெடிக்கச் செய்தனர். 15 நிமிடங்களில் அந்தக் கப்பல் கடலில் மூழ்கியது. கடல் புலிகளில் கங்கை அமரன் பிரிவு என்ற ஒரு பிரிவு உள்ளது. அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று விடுதலைப் புலிகள் அமைப்பு அறிவித்துள்ளது.
கப்பல் மூழ்கியபோதும் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்று இலங்கைக் கடற்படை தெரிவித்தது. இந்த கப்பல் திரிகோணமலை துறைமுகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு, கடற்படைக்குத் தேவையான ஆயுதங்களை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தது. தாக்குதல் நடந்தபோது, அந்த கப்பலில் நிறைய வெடிகுண்டுகள் இருந்தன. விடுதலைப் புலிகளுக்காக வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களைக் கொண்டு வரும் கப்பல்களை நடுக்கடலில் கண்டுபிடித்து அழிக்கும் பணியிலும் இந்த கப்பல் ஈடுபட்டிருந்தது. அக் கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர்.
Tuesday, May 13, 2008
இலங்கை கடற்படை கப்பல் மூழ்கடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment