உயர்கல்வி மூலம் தனியார் கொள்ளையடிக்கின்றனர். மருத்துவம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் உள்ள இடங்களுக்கு ஏற்பத் தகுதியுள்ள மாணவர்கள் இருந்தும் கல்விக் கட்டணத்தை உயர்த்துகின்றனர். இதனால், சமூகத்தில் அபாயகரமான ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.
மாநிலத்தின் சில இடங்களில் போலீஸ் துணையுடனும், பல இடங்களில் அரசியல்வாதிகள் துணையுடனும் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் மற்றும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக மார்ட்டின் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட அவர், தலைமறைவாக இருக்கிறார் என போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பங்கேற்ற விழாவில் மார்ட்டினும் கலந்து கொண்டார். ஆனால், அவர் கைது செய்யப்படவில்லை. தடை செய்த பொருள்களை பயந்து விற்பனை செய்துகொண்டிருந்தவர்கள் இப்போது பகிரங்கமாக விற்பனை செய்கின்றனர். வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகளை தமிழகத்திலேயே அச்சடித்து போலியாக விற்பனை செய்கின்றனர். (கஞ்சா பொட்டலங்களையும், லாட்டரி டிக்கெட்களையும் பத்திரிகையாளர்களிடம் ராமதாஸ் காட்டினார். அப்போது, இன்று காலை வாங்கப்பட்டவை இவை என்று தெரிவித்தார்.)
விலைவாசி உயர்வு மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆன்-லைன் வர்த்தகம் தடை செய்யப்படவில்லை. பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை இல்லை. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் சாதனைகளை விட வேதனை தான் அதிகம். ஆக்கப்பூர்வமான எதிர்க் கட்சியாக, ஆளும் கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முதல்வரைச் சந்திக்கும்போது நேரடியாகவும், சட்டப் பேரவையிலும் பலமுறை தெரிவித்திருக்கிறோம். அரசின் குறைகளைச் சுட்டிக் காட்டினால் முதல்வர் கோபப்படுகிறார்.
""2011-ல் ஆட்சிக்கு வரப்போகிறீர்களே, அப்போது செய்யுங்கள்'' என பதிலளிக்கிறார். இதுபோன்று ஏழுமுறை முதல்வர் கூறியுள்ளார். கட்டுப்படுத்த முடியாத மது, கஞ்சா, லாட்டரி சீட்டு ஆகியவை மூலம் ""இளைஞர்களே சீக்கிரம் அழிந்து போங்கள்'' என்பது போல் அரசின் செயல்பாடு உள்ளது என்று ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
Tuesday, May 13, 2008
உயர்கல்வியில் கொள்ளை:ராமதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
Post a Comment