இலங்கை விமானப்படையினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் 16 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். இலங்கையின் தெற்குப்பகுதியில் புலிகள் பதுங்கியுள்ள இடங்கள் குறித்து ராணுவத்தினர், விமானப்படைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை, விமானப்படை ஹெலிகாப்டர்கள் விடுதலைப்புலிகளின் மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் புலிகள் இயக்கத்தினர் 16 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் புலிகள் தரப்பிற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது என்றார். இது தவிர வவுனியாவில் ராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் 1 விடுதலைப்புலி கொல்லப்பட்டார்.
Monday, May 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment