கொழும்பில் போலீஸôரை ஏற்றிச் சென்ற பஸ் மீது மனித குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 86 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் விடுதலைப் புலிகளின் நாசகர வேலை என்று இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.
கோட்டை பகுதியில் உள்ள சமுதலோகா விகாரை அருகே வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழந்த 10 பேரில், 3 பெண் போலீஸ் உள்ளிட்ட 8 போலீஸôரும் அடங்குவர். மனித குண்டாக செயல்பட்டவர் மோட்டார் சைக்கிளில் வந்து போலீஸ் பஸ் மீது மோதியதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
காயம் அடைந்தவர்களில் 50 பேர் சாதாரண பொதுமக்கள். சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்ற போலீஸôர் காயம் அடைந்தவர்களை வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மனித குண்டு தாக்குதல் சம்பவத்தை இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச வன்மையாக கண்டித்துள்ளார்.
Sunday, May 18, 2008
கொழும்பில் மனித குண்டு தாக்குதல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment